தனியார் சுத்திகரிப்பு கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த வடமாநில இளைஞர்

சிவகாசி அருகே தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் தவறி விழுந்த வடமாநில இளைஞர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் தனியார் பால் நிறுவனத்தின் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில், கசிவு ஏற்பட்டதால் சென்னையை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் மூன்று பேர் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீபால் என்ற ஊழியர் 12 அடி பள்ளத்தில் இறங்கி கசிவை சரி செய்த போது மண் சரிந்ததால் அவர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

Exit mobile version