வடகிழக்கு பருவ மழை ஓரிரு நாட்களில் தொடங்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவ மழை ஓரிரு நாட்களில் தொடங்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால், புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதிகளிலிலும், வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version