திமுக தொண்டர்கள் யாரும் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலிவுற்ற அதிர்ச்சியில், திமுக தொண்டர்கள் 21 பேர் உயிரிழந்த செய்தியறிந்து, தான் மிகுந்த மன அழுத்தத்தில் உறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தொண்டர்கள் உயிரிழந்த செய்தி தன்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளதாகவும், திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவதாகவும், தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version