பண்டிகை தினங்களில் விருப்பப்படி படங்களை வெளியிடலாம் : தயாரிப்பாளர்கள் சங்கம்

பண்டிகை காலங்களில், திரைப்படங்ககளை வெளியிட கட்டுப்பாடுகள் இல்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய திரைப்படங்கள் வெளியீட்டு குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில், டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ஆம் தேதிகளில் வெளியாகவிருந்த புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும், தங்கள் திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்றுதான் வெளிவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அப்படி வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய விடுமுறை தினங்களில், விருப்பத்திற்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக, சங்கத்தின் திரைப்பட வெளியீட்டுக் குழுவின் அனுமதி பெற்றே, திரைப்படங்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version