நிர்மலா சீதாராமன் தலைமையில் முப்படை தளபதிகள் கூட்டம்

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் முப்படை தளபதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், ராணுவப் படைகளுக்கு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை வீரர்கள், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்களையும் தாக்கி அழித்தனர். தாக்குதலை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ள போதிலும், தங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் முப்படை தளபதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தானோ மற்றும் கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முப்படைகளின் ஆயத்த நிலை, தேவைப்பட்டால் எல்லைபகுதிகளுக்கு படைகளை நகர்த்துவது குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version