கஜா புயல் பாதிப்புகளை பிரதமரிடம் விரிவாக எடுத்துக்கூறுவேன் – பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

கஜா புயல் பாதிப்புகளை பிரதமரிடம் விரிவாக எடுத்துக்கூறுவேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தை அவர் பார்வையிட்டார். வேதாரண்யம் பகுதியில் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்த அவர், நிவாரண உதவிகளையும் வழங்கினார். முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். வேதாரண்யத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ் ஜெ செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது புயல் பாதிப்புகளை பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூற உள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

 

Exit mobile version