நிர்மலா தேவி வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

கல்லூரி மாணவரிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழக சிபிசிஐடி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் வழக்கை தமிழக சிபிசிஐடி காவல்துறையினரே தொடர்ந்து விசாரிக்க உள்ளனர்.

Exit mobile version