நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: பள்ளிமடத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானதன் எதிரொலியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடம் என்னும் ஊரில் இருந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதையடுத்து வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடனடியாகப் பழைய நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றினர்.

சிறிய தரைமட்ட நீர்த்தொட்டி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்துப் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதனைச் செய்தி மூலம் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சென்ற நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கும் பள்ளிமடம் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version