'நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு..

நடிகர் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என ரீமேக் செய்யப்படுகிறது.அப்படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் குமார் இப்படத்தினை இயக்குகிறார்.

இப்படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார்.இதுவே தமிழில் போனி கபூர் தயாரிக்கும் முதல் படமாகும்.இதில் முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இந்தியில் ‘பிங்க்’ படத்தில் நடித்த ஆண்ட்ரியா தாரங் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகை வித்யா பாலன் முதல் முறையாக தமிழில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முடிந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 10 அன்று திரைக்கு வரவுள்ள ‘நேர்கொண்ட பார்வை’  ரசிகர்களிடையே பெறும் எதிர்ப்பார்பை பெற்றுள்ளது.

 

Exit mobile version