தமிழகத்தில் மக்களவை தேர்தலை நடத்த 414 கோடி ரூபாய் நிதி தேவை : சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் மக்களவை தேர்தலை நடத்த 414 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்த 414 கோடி ரூபாய் தேவைப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவப்படையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கம்பெனியில் 160 வீரர்கள் இடம்பெற்று இருப்பார்கள் என்றார். தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை காவல்துறை அளித்துள்ளதாகவும், வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்னர் இறுதி பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version