வீடியோ: ஜப்பானில் பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது

ஜப்பானில், 4 பேர் பயணிக்கும் வகையிலான பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.

ஜப்பானை சேர்ந்த என்.இ.சி. என்ற நிறுவனத்தினர் 4 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய பறக்கும் காரை உருவாக்கியுள்ளனர். இந்த கார் பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்தில் தரையில் இருந்து இயக்கப்பட்ட கார் 10 அடி உயரத்திற்கு மேலெழுந்து சுமார் இரண்டு நிமிடங்கள் வரை பறந்து வெற்றிகரமாக தரையிரங்கியது. இதனையடுத்து, சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், விரைவில் முழு அளவிலான சோதனை ஒட்டங்கள் நடத்தப்படும் என்றும் என்.இ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து சோதனை ஓட்டங்களும் முடிக்கப்பட்ட பிறகு, 2026-ம் ஆண்டிற்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version