என்.சி.சி.யின் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!

டெல்லி கரியப்பா பரேட் மைதானத்தில் என்.சி.சி. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.யின் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்த என்.சி.சி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை பாராட்டுவதாகவும், உலகின் பார்வை நம் நாட்டை நோக்கி இருப்பதாகவும், அதற்கு மிகப்பெரிய காரணம் இளைஞர்கள் தான் என்றும் பெருமிதம் கொண்டார். கடந்த 8 ஆண்டுகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version