கடற்படை புதிய தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்பு

கடற்படையில் வலுவான அடிப்படையை அமைத்து, புதிய உயரங்களைத் தொட முடியும் என கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ள கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கரம்பீர் சிங் 24வது கடற்படை தளபதியாக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து புதிய கடற்படை தளபதி கரம்பீர் சிங்குக்கு, கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய கடற்படை தளபதி, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், தன்னுடைய காலத்தில் கடற்படை புதிய உயரங்களைத் தொடும் என்றும், கடற்படையில் வலுவான அடிப்படையை அமைக்க முடியும் என்றும் உறுதிபட தெரிவித்தார். இந்நிகழ்வில் கடற்படை மூத்த அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version