நாமக்கல்லில் தேசிய காகித தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காகித தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த பல்வேறு போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நாடு முழுவதும் காகித தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள சேஷசாயி காகித ஆலை நிர்வாகம் சார்பில், காகிதத்தின் முக்கியம் குறித்தும் மற்றும் காகிதமே பிளாஸ்டிக்கிற்கு மாற்று உள்ளிட்ட தலைப்புகளில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேதி தேசிய காகித தின விழாவில் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version