கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை

கோவையில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை லாரிபேட்டையில் உள்ள செளருதீன் என்பவரது வீடு மற்றும் ஜி.எம்.நகரில் உள்ள நிஷார் என்பவரது வீடு ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வீட்டில் உள்ள கணினிகள், செளருதீன், நிஷார் ஆகியோரது செல்போன்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு மற்றும் இலங்கையில் குண்டு வெடித்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version