தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது.

17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர விடுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இதனையடுத்து கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அமித் ஷா விருந்து அளிக்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Exit mobile version