மாற்றுத் திறனாளிகளின் வங்கிக்கடன் வட்டி தொகை ரத்து செய்ய நடவடிக்கை – முதலமைச்சர் நாராயணசாமி

மாற்றுத்திறனாளிகள், வங்கிகள் மூலம் பெறும் கடனுக்காக வட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா, சித்தன்குடியில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது பேசிய அவர், மத்தியில் மாற்று ஆட்சி இருப்பதால்தான், மாற்றாந்தாய் பிள்ளையைப் போன்று, புதுச்சேரி நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரியில், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

 

 

Exit mobile version