சுவீடன் பெண்ணை காதலித்து மணந்த நாமக்கல் இளைஞர்

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணை இந்து, கிறிஸ்துவ, சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்த நிகழ்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த தரணி, சுவீடன் நாட்டில் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். அங்கு மரினா சூசேன் என்ற பெண்ணை காதலித்த தரணி, இருவீட்டரின் சம்மத்துடன் சுவீடன் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

தரணியின் குடும்ப வழக்கப்படி, இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பிறகு சுவீடன் பெண் மரினா வழக்கப்படி கிறிஸ்துவ முறைப்படியும், தரணியின் விருப்பப்படி சுயமரியாதை திருமணம் என 3 முறைகளில் திருமணம் நடைபெற்றது. வேற்று நாட்டுக்காரரை மணக்கும் போது இந்து முறைப்படியோ, அல்லது அவர்கள் சார்ந்துள்ள மத முறைப்படியோ தான் திருமணம் நடைபெறுவது வழக்கம். எந்த கருத்து முரண்பாடும் வராமல் இருக்க மூன்று முறைகளிலும் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Exit mobile version