வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கோவை அருகே, வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள ஜெங்கமாநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் வீட்டின் முன்பு தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடுஇரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆட்டோ மீது பெட்ரோல் பாட்டிலை வீசி தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version