காவலரின் விரலை கடித்து துண்டாக்கிய மர்ம நபர் கைது

சென்னை தி.நகரில் காவலரின் விரலை கடித்து துண்டாக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தியாகராய நகர் சவுத்போக் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து மர்ம நபர் ஒருவர் வெறித்தனமாக கற்களை வீசி தாக்கினார். இதில், 3 கார் கண்ணாடிகள் மற்றும் ஒரு வீட்டின் ஜன்னல் கதவு உடைந்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குடியிருப்புவாசிகள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, காவலர்கள் அங்கு சென்று அந்த நபரை பிடிக்க முயன்றனர்.

அப்போது அந்த நபர் தலைமை காவலர் சுந்தரமூர்த்தி விரலை கடித்து துண்டாக்கி விட்டு தப்ப முயன்றார். குடியிருப்பு வாசிகள் மற்றும் அருகில் பணியாற்றும் காவலாளிகள் சேர்ந்து அவரை பிடித்தனர். அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அசாமை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

Exit mobile version