வங்கதேசத்தில் விமானத்தை கடத்த முயன்ற மர்ம நபர் சுட்டுக்கொலை…

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிலிருந்து – துபாய்-க்கு சென்ற விமானத்தை, நடுவானில் மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து துபாய் நோக்கிச் சென்ற ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ என்ற விமானம் சிட்டகாங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமானத்தைக் கடத்த முயன்தாகவும், அந்த நபர் விமானத்தின் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயன்றதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து, விமானத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய ராணுவத்தினர் முதலில் விமானத்தில் பயணித்த 173 பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து, அதிரடியாக விமானத்தில் நுழைந்த ராணுவத்தினர் மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

இதனால் பல மணிநேரம் நீடித்த பதற்றம் தணிந்தது. மர்ம நபர் யார்?.. எதற்காக விமானத்தை கடத்த முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version