கிட்னி சென்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கிய கும்பல்

தனியார் மருத்துவமனை பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு வாங்குவது மோசடி செய்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகள்அமைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயரில் மர்ம கும்பல் ஒன்று பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி, சிறுநீரகத்தை 3 கோடிக்கு வாங்கி கொள்வதாக விளம்பரம் செய்தது. இதனையடுத்து 500 க்கும் மேற்பட்டோர் அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு கட்டணமாக தலா 7 ஆயிரத்து 500 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர், பின்னர் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மருத்துவமனை பெயரில் போலி கணக்கு துவங்கி, மர்ம நபர்கள் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version