நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: பாஜக-காங். கொறடாக்கள் உத்தரவு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது. அவைக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று தெரிவித்து வரும் காங்கிரசும், அவர்களது கட்சி எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, காங்கிரஸ் சார்பில் எதிர்கட்சியினருடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் இன்று விவாதம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version