ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய், மகன் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீட்டுத் தரக்கோரி தீக்குளிக்க முயன்ற தாய் மற்றும் மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே கவராயம் பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் தன் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெரியசாமி என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து ராமருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த ராமர், தன் தாயுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட காவல் துறையினர் ராமரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 

Exit mobile version