அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஈரோட்டில் மாற்று கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

ஈரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இவர்கள் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் இராமலிங்கம் திமுக தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை தருவதாகவும், மக்கள் சுதாரித்து கொண்டு அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version