விளை நிலங்களுக்குள் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்

தேனிக்கோட்டை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டு பகுதிகளுக்குள் விரட்டியடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சாவரபத்தம், கல்பாலம், மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்தநிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 30க்கும்
மேற்பட்ட யானைகளில், 20க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் சாவரபத்தம், கல்பாலம், மேடுமுத்துக்கோட்டை ஆகிய கிராமங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அச்சமடைந்த கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

 

Exit mobile version