அமமுக-வைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய 150-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில், அக்கட்சியில் இருந்து விலகி 150-க்கும் மேற்பட்டோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

 

 

 

Exit mobile version