கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நலத்திட்ட நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு

கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் விமானநிலையம் வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். இதையொட்டி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அவருக்கு கேரள ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் குமரிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பிற்பகலில் நடைபெறவுள்ள நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

Exit mobile version