ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பதிலளிக்க வேண்டியவர் மோடி மட்டுமே : ப.சிதம்பரம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விமான படை அதிகாரிகளை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கவில்லை என்றும் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர், ரஃபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை என்றும் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட ஊழல் குறித்து மட்டுமே வினவி வருவதாக விளக்கம் அளித்தார்.

எனவேதான், விமானப்படை அதிகாரிகள் ரஃபேல் ஒப்பந்தத்திலிருந்து விலகி கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். ரபேல் ஒப்பந்தம் குறித்து பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு இருப்பதாக சிதம்பரம் தெரிவித்தார்.

Exit mobile version