நாமக்கல் அருகே பல்வேறு நலத் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்

நாமக்கல் அருகே படவீடு பேரூராட்சி பகுதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

நாமக்கல் அருகே படைவீடு பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுகட்டியூர், அல்லிநாயக்கன்பாளையம் பகுதிகளில் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், குடிநீர் குழாய்களை பதித்தல், தார்சாலை அமைத்தல், மானிய விலையில் இருசக்கரவாகனம் வழங்குதல் உள்பட 1 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால், குடிநீர் பிரச்சனை ஏற்படாது என்று தெரிவித்தார்.

Exit mobile version