பிறந்தநாள் விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றசாட்டு

கோவை மாவட்டம் எட்டிமடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதே தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது தமிழக நலனில் அக்கறை காட்டுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Exit mobile version