கோவை அரசு மருத்துவமனையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தபின், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவர்களது உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயசித்ரா நந்தகோபாலை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களிடம், அங்குள்ள செய்யப்பட்டுள்ள வசதிகள், கழிப்பறை மற்றும் குடிநீர் போன்றவை பொதுமக்களுக்கு சரியாக கிடைக்கின்றனவா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

Exit mobile version