மக்கள் கேட்காமலே அனைத்தையும் செய்வது அதிமுக ஆட்சி : அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாறி உள்ளது என்றும் இனி வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக-வே வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. மக்கள் கேட்காமலேயே அவர்களுக்குத் தேவையானதை இந்த ஆட்சி செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, அடுத்த ஆண்டு முதல்  12 ஆம் வகுப்பு  படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு ஏற்படுத்த, 72 ஆயிரம் ஸ்மார்ட் போர்டு விரைவில் கொண்டுவரப்படும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.

Exit mobile version