தொண்டாமுத்தூர் அருகே இந்தியன் வங்கியின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இந்தியன் வங்கியின் புதிய கிளையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூரில், இந்தியன் வங்கியின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து, மகளிர்  சுயஉதவிக் குழுக்களுக்கான 2 கோடி ரூபாய் கடனுக்கான காசோலையை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 7 ஆண்டுகளாக அதிமுகவின்  ஆட்சியில், அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொடர்ந்து அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version