விபத்தில் உயிரிழப்பு: எம்.பி. ராஜேந்திரன் உருவப் படத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் மரியாதை

சாலை விபத்தில் மரணமடைந்த விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன் உருவப் படத்தை அவரது சொந்த ஊரில் திறந்து வைத்த அமைச்சர் சி.வி.சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 24ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன் மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான திண்டிவனம் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் மறைந்த எம்.பி., ராஜேந்திரனின் உருவப் படத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்து, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி., ஏழுமலை,வானூர் எம்.எல்.ஏ., சக்கரபாணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Exit mobile version