கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுகவினர் உதவி – அமைச்சர் ராஜ லட்சுமி அனுப்பி வைத்தார்

நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அனுப்பி வைத்தார்.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் மற்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நெல்லை அதிமுக புறநகர் மாவட்டம் சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து
அனுப்பிவைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

Exit mobile version