“அப்படியே ஓட்டுப்போட்டு கிழித்துவீட்டீர்கள்” – அமைச்சர் பொன்முடி சர்ச்சைப் பேச்சு!

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி பதவியேற்றதிலிருந்து மக்களை ஆங்காங்கே தரைக்குறைவாக பேசி வருவது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே ஓசியில் தானே பேருந்தில் பயணிக்கிறீர்கள் என்று பேசியவர், சட்டசபையில் யோவ் உட்காருயா என்று ரவுடி போலும் அதட்டியிருக்கிறார். தற்போது விழுப்புரம் மாவட்டம் அருஞ்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் மக்கள் தங்களுக்கு குடிநீர் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் பொன்முடி ‘அப்படியே ஓட்டுப்போட்டு கிழித்துவிட்டீர்கள், லபோதிபோ என்று கூச்சல் எழுப்பாதீர்கள்” என்று பேசியிருக்கிறார்.  இந்தப் பகுதி சாலை அமைத்து தந்தது நான், கட்டிடம் கட்டியது நான், இப்படி பலவிசயங்கள் செய்தது நான் என்று அரசுப் பணத்தில் செய்ததை தன் பணத்தில் செய்ததைப் போல் பாவலாவாக பேசி அதிகார போதையில் மக்களைத் தரைக்குறைவாய் பேசியுள்ளார்.YouTube video player

Exit mobile version