இந்த தேர்தலோடு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரை

இந்த தேர்தலோடு, குடும்ப அரசியல் நடத்தும் திமுகவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசார கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் கிஷன்ரெட்டி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுமக்கள் நலனுக்காக ஆட்சி நடத்தும் அதிமுக அரசு வேண்டுமா? அல்லது குடும்ப மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்தும் திமுக அரசு வேண்டுமா என்று சிந்தித்து வாக்குகளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Exit mobile version