குறை இருந்தால் நேரடியாக தொடர்பு கொள்ள அமைச்சர் அறிவுரை

ஈரோடு மாவட்டம் பவானி ஜம்பை பேரூராட்சியில் கிராம மக்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், ஏதேனும் குறையிருந்தால் தன்னிடம் நேரடியாக தெரிவிக்குமாறு அவர்களிடம் தனது முகவரி அட்டையை வழங்கினார்.

பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொட்டிகள், கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார். அப்போது கருக்கம்பாளையம் மற்றும் கூடலூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையென கூறியதுடன் பேரூராட்சி அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, துணிச்சலாக கேள்வி எழுப்பிய கிராம பெண்களை பாராட்டிய அமைச்சர் கே.சி. கருப்பணன், ஏதேனும் குறை இருந்தால் நேரடியாக தொடர்பு கொள்ள தனது முகவரி அட்டையை வழங்கினார். மேலும், தனக்கு வழங்கப்பட்ட பொன்னாடைகளை அங்கிருந்த முதியோர்களுக்கு அமைச்சர் அணிவித்தார். அமைச்சரின் இந்த செயலைக் கண்டு கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version