பால் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை பிடித்த பால் முகவர்கள்

சென்னை மாநகரில் பல மாதங்களாக பால் திருட்டில் ஈடுபட்டு வந்த பால் திருடனை பிடித்த பால் முகவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னையில் இரவு நேரங்களில் சிலர் இருசக்கர வாகனங்களில் பால் பாக்கெட்டுகளை கொள்ளையடிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்பொழுது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனின் உத்தரவின்படி நகரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பால் பாக்கெட்டுகளை ஒருவர் திருட முயன்றபோது பால் முகவர்கள் பிடித்துடன் அவர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்தனர். இது தொடர்பான கூடிய சிசிடிவி காட்சியையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பால் திருட்டில் ஈடுபட்ட ஜெகதீஷ் என்பவரையும் அவரின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version