மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. சேதமான ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

Exit mobile version