News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்-ன் நினைவு தினம் இன்று!

Web Team by Web Team
December 1, 2021
in TopNews, கட்டுரைகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்-ன் நினைவு தினம் இன்று!
Share on FacebookShare on Twitter

மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்பின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுத்துலகில் அவர் போராட்ட வாழ்வு குறித்த செய்தி தொகுப்பை காணலாம்…

“சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே” என்று கீழ்வெண்மணியில் மனித உயிர்கள் எரிக்கப்பட்ட போது, அந்த நெருப்பு அணைவதற்குள், அதிகார பீடத்தை தனது கவிதை சாட்டையால் சுழற்றியவர் தான் மக்கள் கவிஞர் இன்குலாப்.

1944-ம் ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இவர், தனது இயற்பெயரான சாகுல் ஹமீது என்பதை பின்னாளில் இன்குலாப் என்று மாற்றிக்கொண்டார்.

கல்லூரி மாணவராக இருந்த போது 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் களம் கண்டு சிறைக்கு சென்ற இன்குலாப், பொதுவுடமை கொள்கையின் குன்றாக விளங்கினார்.

படைப்பாளி என்பவன் எப்போதும் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்பதை எழுத்தின் மூலமும், வாழ்வின் மூலமும் பறை சாற்றிய அவர், வெள்ளை இருட்டு, சூரியனை சுமப்பவர்கள், காந்தள் நாட்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்கள், எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், நாடக நூல்களை எழுதியுள்ளார்.

image

தமிழ் ஈழ விடுதலைக்காக இன்குலாப் எழுதிய மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா என்ற பாடல் தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

2006-ம் ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இன்குலாப்பிற்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதையும், ஒரு லட்சம் பணத்தையும், தமிழ் ஈழத்தை அரசு காக்க தவறிவிட்டது என்று கூறி திருப்பி கொடுத்துவிட்டார்.

தனது புரட்சிகர வார்த்தைகளால் மக்கள் கவிஞராக வலம் வந்த இன்குலாப், 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் நாள் உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர் அவரது உடலை இன்குலாப்பின் ஆசைப்படி செங்கை அரசு மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.

இன்குலாப் எழுதிய காந்தள் நாட்கள் என்ற கவிதை நூலுக்கு 2017-ம் ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர், இன்குலாப் விருதுக்காக எழுதவில்லை என்றும், தமிழுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் மட்டுமே எழுதினார் என்று விருதை வாங்க மறுத்துவிட்டனர்.

மனிதன் என்றொரு பாடலை இசைத்துக் காட்டி, பெயரில் மட்டுமல்ல வாழ்விலும் போராளியாக வாழ்ந்த மக்கள் கவிஞர் இன்குலாப்பின் நினைவை போற்றுவது நமது கடமை…

நியூஸ் ஜெ செய்திகளுக்காக சாக்லா…

Tags: Inkulabmemorialnewsjtamil naduTamil Poet
Previous Post

22 நாட்களாக தேங்கிய மழை நீரை அதிகாரிகள் அகற்றவில்லை

Next Post

அண்ணா திமுக செயற்குழு கூட்டம் – சட்ட திட்ட விதிகளில் திருத்தம்

Related Posts

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
தமிழ்நாடு

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

February 3, 2023
உணவு தேடி தமிழகத்தில் பறவைகள் அலையும் அவலம் !
தமிழ்நாடு

உணவு தேடி தமிழகத்தில் பறவைகள் அலையும் அவலம் !

January 31, 2023
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!
தமிழ்நாடு

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!

January 30, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!
தமிழ்நாடு

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
தமிழகத்தை கஞ்சா நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியா அரசு!
தமிழ்நாடு

தமிழகத்தை கஞ்சா நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியா அரசு!

January 26, 2023
Next Post
அண்ணா திமுக செயற்குழு கூட்டம் –  சட்ட திட்ட விதிகளில் திருத்தம்

அண்ணா திமுக செயற்குழு கூட்டம் - சட்ட திட்ட விதிகளில் திருத்தம்

Discussion about this post

அண்மை செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

February 6, 2023
வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

February 6, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version