அதிமுக தலைமையில் மெகா கூட்டணி- எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற சிலரது மனக்கணக்கை தவிடுபொடியாக்கி, அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை முதல்வரும், துணை முதல்வரும் அமைத்து வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற சிலரது மணக்கணக்கை அதிமுக தவிடு பொடியாக்கியுள்ளதாக தெரிவித்தார். .

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை, வெற்றிக் கூட்டணியை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்தியாவில் முன்னணியில் உள்ள 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version