இணையத்தில் வைரலாகும் நார்வேல் நாய்குட்டி

இந்த உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் தினமும் நடக்கின்றது. அவற்றில் சில, மக்களின் மனதை கவர்ந்து இணையத்தில் பரவலாக பேசப்படும். அந்த வகையில், முகத்தில் வால் உடைய நாய்குட்டி ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு, இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.

7 ஆண்டுகளாக மாக் அமைப்பு, ஆதரவற்ற செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது. ஆனால் இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை பார்த்ததே இல்லை என கூறுகின்றனர் அந்த அமைப்பினர். கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்ட அந்த அமைப்பு, அதற்கு நார்வால் என பெயரிட்டு வளர்த்து வருகிறது.

நார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலம். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற நீளமான கூர்மையான உறுப்பு இருக்கும். மீட்கப்பட்ட நார்வால் நாய்க்குட்டி, கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்யபட்டது. அப்போது, அந்த வால், நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. அந்த வாலை மேலும் கீழும் அசைக்க முடியாது, அதாவது வாலாட்ட இயலாது. இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாய்க்குட்டி யூனிகார்ன் பப்பி என இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. யூனிகார்ன் என்பது ஒற்றைக் கொம்பு கொண்டு குதிரை போன்ற வடிவில் இருக்கும் புராண கதைகளில் வரும் ஒரு விலங்கு ஆகும். அன்று ஆதரவற்ற நிலையில் இருந்த நாய்குட்டி இபோது நார்வல் என்ற பெயரோடு இணைய வாசிகளை கவர்ந்து வருகிறது.

Exit mobile version