பட்டாசு விற்பனையாளர்கள், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் ஆலோசனை

சிவகாசியில் பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் தென் தமிழகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version