சேலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து இறைச்சி கடைக்காரர் வெட்டிக்கொலை

சேலம் அருகே இறைச்சிக் கடைக்காரரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அறிவுச்செல்வன். அறிவுசெல்வனுக்கு மதுபழக்கம் அதிகம் இருந்ததால் அவரது மனைவி அவரை பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று வீட்டிலிருந்த அறிவுச்செல்வனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறிவுச்செல்வனுக்கு பெண்களுடன் அதிக தொடர்பு இருந்து வந்ததால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version