சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதனையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ராஜாஜி சாலையில் இன்று காலை நடைபெற்றது. இதில், கடற்படை துணை கண்காணிப்பாளர் மேத்யூ டேவிட் கலந்து கொண்டு ஒத்திகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 3 நாட்களுக்கு ஒத்திகை அணிவகுப்பு நடைபெறுவதை ஒட்டி, சென்னை காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலையில் காலை நேரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version