மார்ச் 17ல் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி..ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக கேப்டன் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version