பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, பெரம்பலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக, மாரத்தான் போட்டி தொடங்கியது. பாலக்கரை, சங்குப்பேட்டை, அரணாரை, விளாமுத்தூர் சாலை, வழியாக மாவட்ட விளையாட்டு மைதானம் வரை 10 கிலோ மீட்டருக்கு போட்டி நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சமூக நலத்துறை சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version