கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட, விவசாயிகள், மற்றும் பொது மக்களுக்கு உதவுவதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நடிகர் வையாபுரி கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

3,10,21 கிலோ மீட்டர், என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version